டெல்லி போராட்டத்தில் வன்முறை: 5 பேர் பலி 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மத்திய அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மாவூஜ் புர் பகுதியில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, பெட்ரோல் நிலையங்களுக்குத் தீவைக்கப்பட்டது. பதற்றமான சூழ்நிலை நிலவியதால் போலீசாரும் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலவரக்காரர்களை விரட்டியடித்த பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், டெல்லி வன்முறையில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த கலவரத்தில் தலைமை காவலர் ஒருவர், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல் இந்த கலவரத்தின்போது துப்பாக்கியால் சுட்ட ஷாருக் என்பவரை காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் இந்த கலவரத்தால் 10 இடங்களில் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கலவரம் நடக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், மேலும் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடி அறிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

6 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

7 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

7 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

8 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

8 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

9 hours ago