Categories: இந்தியா

காங்கிரஸ் vs பாஜக : ராஜஸ்தானில் தொடங்கியது விறுவிறு வாக்குப்பதிவு.!

Published by
மணிகண்டன்

இந்திய தேர்தல் ஆணையம் இம்மாதம் நடைபெறும் என அறிவித்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், இன்று ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணி வரை மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ராஜஸ்தானில் 2018 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 73 தொகுதிகள் வென்று இருந்தது. இந்த முறை ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜகவும் கடுமையாக முயற்சித்து வருகிறது.

ராஜஸ்தானில் நாளை சட்டமன்ற தேர்தல்..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனார் காலமானதைத் தொடர்ந்து அவர் போட்டியிட இருந்த கரன்பூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து மற்ற 199 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் சுமார் 5 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 51,890 வாக்குச் சாவடிகளில் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 69 ஆயிரம் காவலர்கள் உட்பட மொத்தம் 1.70 லட்சம் பாதுகாப்புப்படை வீர்கள் பாதுகாப்பு பணியில் மாநிலம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.

Recent Posts

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

24 minutes ago

“படத்தால் ஏற்பட்ட கடனுக்கு வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்” – ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு மாமியார் மறுப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…

34 minutes ago

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!

டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…

2 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

3 hours ago

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

4 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

5 hours ago