நாங்கள் ‘தெரு போராளிகள்’….! தேர்தல் ஆணையத்தின் உதவியின்றி பாஜக 50 இடங்கள் கூட தாண்டி இருக்காது….! – மம்தா

Published by
லீனா

தேர்தல் ஆணையம் இதற்கு உதவவில்லை என்றால் பாஜக 50 இடங்களை கூட தாண்டி இருக்காது.

மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேர்காணலின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தை அவதூறாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் பாஜகவின் செய்தி தொடர்பாளர் என்றும், தேர்தல் ஆணையத்தின் உதவியின்றி பாஜக 50 இருக்கைகளை கூட தாண்டி இருக்காது. தேர்தல் ஆணையம் இந்த முறை நடந்து கொண்ட விதம் கொடூரமானது.

இருந்தாலும், தேர்தலில் மம்தாவின் கட்சி இரட்டை சதத்தை தாண்டி வெற்றி பெற்றதற்கு குறித்து கேட்டபோது, நான் தெரு போராளி. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இரட்டை சதம் அடிப்போம் என்றும், பாஜக எழுபதை தாண்டாது என்றும் சொன்னேன் மேலும், தேர்தல் ஆணையம் இதற்கு உதவவில்லை என்றால் பாஜக 50 இடங்களை கூட தாண்டி இருக்காது என கூறியுள்ளார்.

நந்திகிராம் தொகுதியில் மம்தாவின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அங்கு வாக்கு எண்ணிக்கையையில் குளறுபடி நடந்துள்ளதால் தான் நாங்கள் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு பரிசீலனை செய்துள்ளோம். ஆனால், அங்கு தோல்வி அடைந்தது குறித்து நான் வருத்தப்படவில்லை. நாங்கள் அதிகமான இடங்களை பெற்று தான் வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், சில இடங்களில், வாக்கு இயந்திரங்களில் கோளாறு மற்றும் பல அஞ்சல் வாக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வங்காள மக்களுக்கு தங்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்கள் வங்காளத்தை  மட்டுமல்ல, நாட்டையும் காப்பாற்றியுள்ளனர் என்றும், நாங்கள் தெரு போராளிகள் என்பதால்தான், எங்கள் கட்சி வென்றது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரிடம் கொரோனவை எவ்வாறு கையாள போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மத்திய அரசு அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்றும், சுகாதார நெருக்கடி காரணமாக எந்த ஒரு வெற்றிகரமான ஊர்வலங்களையும் எடுக்க வேண்டாம் என்றும் தங்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

7 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago