இஸ்லாமிய மதத்தில் ஒரு ஆண் மூன்று முறை தலாக் என கூறி தனது மனைவியை விவகாரத்து செய்யலாம் என்ற நடைமுறை இருந்தது.இதனால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறியதால் கடந்த ஜூலை மாதம் இந்த நடைமுறை இந்தியாவில் முழுவதும் தடை செய்யப்பட்டு இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தடையை மீறி முத்தலாக் கூறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமொக்கவைச் சேர்ந்த பெண் ஒருவர் வயது 40 . இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருடைய கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.
இவரது கணவர் அவ்வப்போது வந்து தனது மனைவியை பார்த்து விட்டு மீண்டும் துபாய் சென்று விடுவார்.இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அப்பெண் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.கடந்த ஜனவரி மாதம் இவரின் கணவர் மீண்டும் துபாய் சென்று உள்ளார்.
இருவரும் வாட்ஸ்ஆப் மற்றும் போனிலும் அடிக்கடி பேசி வந்து உள்ளனர்.இடையில் குடும்ப பிரச்சனைகள் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.இதனால் அப்பெண்ணின் கணவர் துபாயில் இருந்து கொண்டே வாட்ஸ்ஆப் மூலம் மூன்று முறை தலாக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் பெங்களூரு காவல் நிலையத்தில் தன் கணவர்மீது தற்போது புகார் கொடுத்து உள்ளார். புதிய முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் அவர் கணவர் மீது காவல் துறைவழக்குப் பதிவு செய்து உள்ளனர். மேலும் அப்பெண்ணின் கணவரின் பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…