மனைவியின் தவறான நடத்தையால், வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், குஜராத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இருவரும் வேலையை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் மனைவி தவறான தொடர்பில் இருப்பதாக, நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவிக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்த கிராம மக்கள், கணவனை தூக்கி சாலையில் நடக்க வைத்துள்ளனர். மேலும் அவரின் பின்னால் சென்ற கிராம மக்கள் குச்சியால் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிறிது தூரம் சென்றது கணவரின் எடை தாங்காமல் நிலைத்தடுமாறும் அந்த பெண்ணை கிராம மக்கள் குச்சி மற்றும் இதர பொருட்களால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த பெண்ணை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில், இந்த காட்சியினை பாலரும் அந்த இடத்தில நின்று வீடியோ எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…