288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 24-ம் தேதி நடைபெற உள்ளது.
ஒரு பக்கம் பாஜக, சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் , மற்றோரு பக்கம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பேசினார்.அப்போது அவர் ,மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என கூறினார்.
மேலும் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவால் நாடு அழிந்து விடும் என சிலர் கூறினர். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் முடிவு எடுத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. நாடு அழிந்து விட்டதா என மோடி கேள்வி எழுப்பினார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பண மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது என மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…