அனுமான் ஜெயந்தியினை முன்னிட்டு குஜராத்தின் மோர்பியில்,காலை 11 மணிக்கு,அனுமானின் 108 அடி உயர சிலை திறக்கப்படும் என்றும்,இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றதில் தான் பெருமைப்படுவதாகவும் ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,அனுமான் ஜெயந்தியான இன்று குஜராத்தின் மோர்பியில் 108 அடி உயர அனுமான் சிலையை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். Hanumanji4dham திட்டத்தின் ஒரு பகுதியாக தனியார் நிறுவனம் ஒன்று நாடு முழுவதும் 4 திசைகளில் 4 அனுமான் சிலைகள் அமைக்கும் முயற்சியில் இது இரண்டாவது சிலை ஆகும்.
முதலாவது அனுமான் சிலை கடந்த 2010 ஆண்டு இந்தியாவின் வடக்கு பகுதியான சிம்லாவில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில்,3 வது சிலை தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என்றும்,4-வது சிலை மேற்கு வங்கத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…