குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.அதில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தினர்.அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் , அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தனர்.
போலீசாரின் இந்த அத்துமீறலை கண்டித்து நேற்று டெல்லியில் பல்வேறு பல்கலைக் கழகங்களை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசியபோது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கடுமையாக சாடினார்.
மேலும் “மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி எனக்கு ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவுபடுத்தியது. இளைஞர்கள் சக்தி வெடிகுண்டு போன்றது. அதை பற்ற வைத்து விடாதீர்கள் ” என கூறினார்.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…