செய்திகள்

மோடி அரசு தனது தவறான பொருளாதார கொள்கைகளை மாற்ற வேண்டும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

பிரதமர் மோடி அரசு தனது தவறான பொருளாதார கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவை சேர்ந்தவர்களே மத்திய மோடி அரசின் பொருளாதார கொள்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவே மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்தித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தியுள்ளதால் […]

india 8 Min Read
Default Image

ரஞ்சி புகழ் நித்தி சுவாமிகள் மதுரை ஆதின மடத்துக்குள் நுழைய கூடாது..,வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்

மதுரை ஆதின மடத்துக்குள் நித்யானந்தா நுழைய போலீசார் அனுமதிக்கக் கூடாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்றும் கூறி  வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தாவை, ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்தபோது அதனை இந்து மக்கள் கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். பாலியல் வழக்குகள் உள்ள நித்யானந்தாவாலும், அவர்களின் பெண் சீடர்களாலும், மதுரை ஆதீனத்தின் புனிதம் களங்கமடைந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இதனை […]

5 Min Read
Default Image

நான் நினைத்திருந்தால் அருண் ஜெட்லிக்கு பதவி கிடைக்காமல் செய்திருக்க முடியும் போட்டு தாக்கும் யஸ்வந்த் சின்ஹா

முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இந்திய பொருளாதாரத்தை சிதைத்து விட்டார்கள் என்று பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாமிபத்தில் பேசியிருந்தார்.  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த சின்ஹா ஆளும் பாஜக அரசை இவ்வாறு விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியது.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருண் ஜெட்லி பின்வருமாறு பேசியுள்ளார். சின்ஹா […]

india 3 Min Read
Default Image

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்: டிடிவி தினகரன்

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று அதிமுகவின் அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும். ஆதரவு எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியம், கட்சி நிதி ரூ. 5 லட்சம் சேர்த்து ரூ. 15 லட்சம் வழங்கப்படும். அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். […]

#Politics 2 Min Read
Default Image

பக்கத்து வீட்டு சிறுமியை கற்பழித்த 25 வயது வாலிபர்: 7 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகில் உள்ள 25 வயது வாலிபனால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் அந்த வாலிபனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டுக்கு வெளியே விளையாட சென்றார். அதன் பிறகு வெகுநேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி […]

india 4 Min Read
Default Image

தேமுதிக நிரந்தர பொதுச் செயலராக விஜயகாந்த் தேர்வு; துணைப் பொதுச் செயலராகிறார் சுதீஷ்

காரைக்குடி : தேமுதிகவின் நிரந்தரப் பொதுச் செயலராக, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலராக, எல்.கே. சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேமுதிக தலைவராக இருக்கும் விஜயகாந்த், பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவில் இதுவரை பொதுச் செயலர் பதவி இல்லை. தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சியில் எத்தகைய […]

#Politics 3 Min Read
Default Image

ஓரே நாளில் 400 போலீஸார் பணியிட மாறுதல்: புதுவை டிஜிபி அதிரடி

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 400 போலீஸாரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சுனில்குமார் கௌதம் உத்தரவிட்டார். புதுச்சேரி சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் டிஜிபி சுனில்குமார் கெளதம் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பண்டிகைக்காலங்களில் போலீசார் கடைகளில் மாமூல் வாங்குவது குறித்து பல புகார்கள் வந்தது. ஏற்கனவே போலீசார் இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்திருந்தார். இதனைத்தடுக்கும் வகையில் புதுச்சேரி […]

india 2 Min Read
Default Image

ஆளுநராக பான்வாரிலால் புரோகித் புதன் அன்று பதவியேற்பு?

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித், வரும் புதன்கிழமை அன்று பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிகாலம் முடிந்த பிறகு, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். வித்யாசாகர் ராவ், கடந்த ஒரு வருடகாலமாக தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு நியமனம் […]

3 Min Read
Default Image

23 பேர் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் போலீசில் புகார்….!

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை காரில் கடத்தி சென்று 23 பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.  அதில், தான் புதிதாக வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்வையிட்டுவிட்டு வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகவும், அப்போது காரில் வந்த இரண்டு இளைஞர்கள் தன்னை காரில் கடத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.  மேலும் காரில் வைத்தே […]

india 3 Min Read
Default Image

ராஜஸ்தானில் பெண் கூட்டு பலாத்காரம்; 6 பேர் கைது

 டில்லியை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.டில்லியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் ராஜஸ்தானின் பிகாநிர் பகுதியில் , கடந்த செப்., 25 அன்று சாலையில் நின்று கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த சிலர் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றனர். பின்னர், மேலும் சிலரை அழைத்து காரில் பலாத்காரம் செய்துவிட்டு கடத்திய இடத்தில் இறக்கிவிட்டு சென்றனர். இந்த பெண் நேற்று(செப்.,28) போலீசில் தன்னை 23 […]

india 2 Min Read
Default Image

ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா சுவாமிகள் மதுரை ஆதீனமாக இந்து மக்கள் கட்சி ஆதரவு..!

மதுரை ஆதினமடத்தின் இளைஞ ஆதீனமாக நித்யானந்தாவை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 2012-ஆம் ஆண்டு நியமித்தார். ஆனால் இதற்கு இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அருணகிரிநாதன் நித்யானந்தாவின் நியமனத்தை ரத்து செய்தார். இந்நிலையில் கடந்த வருடம் பிள்ளையார்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை இளைய ஆதீனமாக அறிவித்தார் அருணகிரிநாதர். இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு இருந்தாலும் அது அந்த அளவுக்கு பெரிதாக இல்லாமல் உடனே அடங்கியது. இதனை எதிர்த்து நித்தியானந்தா […]

5 Min Read
Default Image

ஜெ.மரணம் சிக்கிக்கொள்வாரோ லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே…!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலேவை விசாரிக்கும் என அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை கமிஷனில் யார் எல்லாம் விசாரிக்கப்படுவார்கள். […]

#Politics 3 Min Read
Default Image

ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்றதற்கு முதலமைச்சர் எடப்பாடி கண்டனம்

சென்னை : ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாக்க முயன்றதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முற்பட்ட செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தயது என்று கூறினார். மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடக்காமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

1 Min Read
Default Image

தேர்தலில் வெற்றி பெற முடியாதவர் ஜெட்லி: யஷ்வந்த் சின்ஹா பதிலடி

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியாதவர், தன்னை விமர்சனம் செய்வதாகவும், கறுப்பு பணம் குறித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்தவதாக பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.ஜெட்லியின் நண்பர்:இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால், ஜெட்லி தற்போது நிதியமைச்சராக இருந்திருக்க முடியாது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எனது நண்பர் இல்லை. ஆனால், அவர் ஜெட்லியின் நண்பர். ஜெட்லி எனது பின்னணி பற்றி மறந்துவிட்டார். அரசியலில் நுழைவதற்கு முன் பல […]

#Politics 4 Min Read
Default Image

இந்தியாவில் சிசுக்கள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி : இந்தியாவில் சிசுக்கள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 2016-ல் 1000-க்கு 34 என்ற அளவில் இந்தியாவில் சிசுக்கள் மரணம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

india 1 Min Read
Default Image

மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு

மும்பை: எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. கூட்டத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தொடர் விடுமுறையால் மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் பீதியடைந்த மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துக்கொண்டு ஓடினர். மக்கள் ஓட்டத்தால் ரயில் நிலைய மேம்பாலத்தில் பெரும் கூட்ட […]

#Politics 3 Min Read
Default Image

நெல்லையில் ஆர்ப்பாட்டம்; செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்

நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையின், இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது என்று தனியார் தொலைக்காட்சியின் வள்ளியூர் செய்தியாளர் ராஜு கிருஷ்ணா மற்றும் நெல்லை செய்தியாளர் நாகராஜன் ,தினகரன் பணகுடி செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப அது […]

திருநெல்வேலி 5 Min Read
Default Image

கோவில்பட்டியில் நர்சிங் மாணவி தயாட்சினி மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்

இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு  சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்….. மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்…. மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை […]

#Thoothukudi 3 Min Read
Default Image

கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியுடன் இயக்குனர் ராம் மற்றும் தமிழ் புலிகள் தலைவர் நாகை.திருவள்ளுவன் சந்திப்பு…!

 இலங்கை மக்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் பேசிய மதிமுக தலைவர் வைகோவை தாக்க முற்பட்ட இலங்கை சிங்களவர்களை கண்டித்து இன்று தமிழ் புலிகள் கட்சி மற்றும் மே 17 இயக்கம் சார்பில் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொது அந்தந்த இயக்கங்களை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். சென்னை, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கைது செய்ப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியுடன் தமிழ்  புலிகளின் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் தங்கமீன்கள் திரைப்பட இயக்குநர் […]

cinema 2 Min Read
Default Image

தமிழகத்தில் சரஸ்வதி பூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாட்டம்..!

இன்று காலை முதலே ஏராளமானோர் கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தும், அலங்காரம் செய்தும் ஆயுத பூஜை கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். வீடுகளிலும், பனைஒலை தோரணங்கள், வாழை மர கன்றுகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயுத பூஜை பண்டிகையின் போது வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொரி, அவல், பழங்கள், பூக்கள், வாழை மரக்கன்றுகள் ஆகியவற்றை விற்பனை நேற்று மாலை முதலே களைகட்டி வருகிறது.ஆயுத பூஜையையொட்டி, தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் இன்று  சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 

Festival 2 Min Read
Default Image