unknown node
சென்னை : ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாக்க முயன்றதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முற்பட்ட செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தயது என்று கூறினார். மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடக்காமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.