மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான மொத்தம் -515ல்.,513 இடங்களுக்கு அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு..!

Published by
kavitha
  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்கள் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியீடப்பட்டு வருகின்றன.
  • மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான மொத்தம் 515 இடங்களில் 513 இடங்களுக்கு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது.தேர்தலில் கட்சி அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான போட்டியில் மொத்தம் 515 இடங்களில் கூட்டணிகளோடு  நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில் தற்போது அதற்கான முடிவுகள் வெளியீடப்பட்டுள்ளது, அதில் அதிமுக கூட்டணி மொத்தம் 435 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது. இதில் 214 பதவிகளைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.

மறுபக்கம் சமபலத்துடன் அதிக்கம் செலுத்தி வந்த  திமுக மொத்தம் 416 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது.அதில் 243 பதவிகளைக் கைப்பற்றி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலில் தனித்து களம் இறங்கி  அமமுக 498 இடங்களில்  போட்டியிட்டது.ஆனால் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியையும் வெல்லவில்லை. அதே போல தனித்து களம் இறங்கி 364 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியும் ஒரு இடத்தைக்கூட கைப்பற்றவில்லை. தமிழக பாஜக மொத்தம் 81 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது இதில் 7 இடங்களைக் கைப்பற்றி வெற்றிக்கனியை ருசித்துள்ளது. தமிழக காங்கிரஸ் இந்த பதவிக்காக 74 இடங்களில் போட்டியிட்டது.அதில்  15 இடங்களை கைப்பற்றி உள்ளது.அதே போல்  10 இடங்களில் போட்டியிட்ட மதிமுக 1  இடத்தை கைப்பற்றியுள்ளது.22 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் வென்று உள்ளது.23 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட்  7 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது, 36 இடங்களில் போட்டியிட்ட பாமக  16 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதே போல் 3 இடங்களைக் கைப்பற்றி உள்ளது  தேமுதிக மற்றும் 6 இடங்களில் போட்டியிட்ட தமாகா  1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.மேலும் சுயேட்சைகள்  3 பேர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

24 minutes ago

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

46 minutes ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

52 minutes ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

1 hour ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

1 hour ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

2 hours ago