மாநில அளவில் சென்னை அறிவியல் விழா நடத்தப்படும் என பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வரும் கல்வியாண்டில் மேலும் 10 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாநில அளவில் சென்னை அறிவியல் விழா நடத்தப்படும்.
இதன் அங்கமாக அறிவியல் கண்காட்சி, குழு விவாதங்கள், பிரபல அறிவுரைகள், அறிவியல் செயல்முறை சோதனைகள் மற்றும் அறிவியலில் பொழுதுபோக்கு அம்சமாக பொம்மலாட்டம் ஆகியவைகளும் நடத்தப்பட உள்ளன. மாணவர்களுக்கு இடையே ஆய்வு மனப்பான்மையை உருவாக்கி ஊக்குவிக்கும் விதமாக தமிழக அளவில் கணிதவியல், வேதியியல் & உயிரியல் துறைகளில் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். 75% ஊரகம், 25% நகர்புறங்களிலிருந்தும் மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டு 21 நாட்கள் முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
மேலும், உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பெற திருநெல்வேலி மாவட்ட பனைப்பொருள் கூட்டுறவு சம்மேளன நிறுவனம் மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் பதிவு செய்வதற்காக அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் மற்றும் 02-07-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்,…
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…