10 ஆண்டுகள் ஆண்ட அதிமுக ஆட்சியில் முதல் 5 ஆண்டுக்கு -100 – மார்க் போட்ட ப.சிதம்பரம்

Published by
பாலா கலியமூர்த்தி

பத்து ஆண்டுகள் அதிமுக கட்சி ஆண்டிருக்கிறது, முதல் 5 ஆண்டுக்கு -100 மதிப்பெண் போட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். 

இதுகுறித்து காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திடம், தமிழக அரசியலில் இப்ப இருக்கின்ற ஆளும் கட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் வழங்குவீங்க என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கடந்த 10 ஆண்டுகள் அதிமுக கட்சி தமிழகத்தை ஆண்டிருக்கிறது, அதில் முதல் 5 ஆண்டுகளுக்கு -100 மதிப்பெண் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அந்த முதல் 5 ஆண்டுகளில் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு மார்க் போட முடியாது என்று மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். அந்த -100 மதிப்பெண்ணை எடுத்து இவர்களுக்கு போடுங்கள் என்றும் நான்கு வருடம் 9 மாதம் முதல்வர் பழனிசாமி எங்கே இருந்தார் என்றே தெரியாது எனவும் கூறியுள்ளார். 3 மாதத்தில் சுறுசுறுப்பாக வந்து ஊர் ஊராக சென்று, இந்த திட்டத்தை அறிவிக்கிறேன், அந்த திட்டத்தை அறிவிக்கிறேன் என்றால், மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ரூபாய் கூட ஒதுக்க வேண்டும் என்று அவர்களுக்கு அவசியமில்லை, ஒதுக்கவும் மாட்டார்கள் என குற்றசாட்டியுள்ளார். ஏனென்றால், வரைவு திட்டமே கிடையாது. வரைவு திட்டம் தயாரித்து, அதனை ஆய்வு செய்து, அமைச்சரவை ஏற்றுக்கொண்ட பிறகு நிதியமைச்சர் தான் நிதி ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  தேர்தலுக்கு 15 நாட்கள் முன்பு அறிவிப்பு என்பது மல்லிகை, கனகாபரம் பூ மத்தாப்பு மாதிரித்தான் அந்த அறிவிப்பும் என தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னாள் வரும் அறிவிப்புகள் அனைத்தும் மத்தாப்புதான் என்றும் இந்த அரசாங்கம் வெற்றி பெற்றால் செயல்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் வெற்றியை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 1 ரூபாய் ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளதா?என்று கேள்வி எழுப்பி, தமிழகத்தில் பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

19 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

40 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

51 minutes ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

1 hour ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago