பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை!

Published by
Rebekal
தாரமங்கலம் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாரமங்கலம் அருகே 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விசாரித்த போலீசார் ஏற்கனவே இரண்டு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் அம்பேத்கர் நகரில் வசித்து வரக்கூடிய 15 வயது சிறுமியை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் வயிற்று வலி காரணமாக பெற்றோர்கள் தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து பார்த்த பொழுது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த 11ஆம் தேதி சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் சிறுமி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த சிறுமியின் உறவினர்களான 2 வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனாலேயே சிறுமி கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றதும் தற்பொழுது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் ஆகிய சரண்குமார், சண்முகராஜா ஆகிய இருவரிடம் தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அச்சிறுமி வசித்து வரக்கூடிய வீட்டருகே உள்ள மக்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வாலிபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

14 minutes ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

54 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

2 hours ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

3 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

3 hours ago