போலியாக சேர்ந்த 1500 பேர், 60 லட்சம் ரூபாய் இழப்பு- கிசான் திட்டத்தில் தொடர்ந்து முறைகேடு.!

Published by
பாலா கலியமூர்த்தி

கரூரில் பிரதமர் கிசான் திட்டத்தில் போலியாக 1500 பேர் சேர்க்கப்பட்டது மற்றும் ரூ.60 லட்ச மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டு நிதி வழங்கப்படும் கிசான் திட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 78,517 விவசாயிகள் பயனாளிகளாக உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 3,282 பேர் விவசாயிகளாக பதிவு செய்துள்ளனர்.

அதில், சுமார் 1,500 பேர் போலி என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இரண்டு தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், ரூ.60 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபர்களின் சிட்டா அடங்கல், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக, முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் தொடர்ந்து முறைகேடு நடந்து வருவதால், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தற்காலிகமாக இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று வேளாண்துறை இணை அதிகாரிகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 14 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி
Tags: abusepmkisan

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

3 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

4 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

5 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

5 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

6 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

6 hours ago