சென்னை அண்ணாநகரை சேர்ந்த 16 வயது இளம்பெண் இணையத்தில் சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருடன் பேசி வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆரம்பத்தில் பேசிய அந்த வாலிபர் போகப்போக சற்று ஆபாசமாக பேசியுள்ளார். உடனே சிறுமி அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
ஆனால் அந்த வாலிபரும் வேறொரு இன்ஸ்டாகிராம் முகவரியிலிருந்து ஒரு பெண்ணின் பெயரில் அந்த அந்த சிறுமியுடன் மீண்டும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அச்சிறுமியும் வேறொரு பெண் போல என நினைத்து அந்த வாலிபருடன் பேசி வந்துள்ளார். இருவரும்
வீடியோ கால் செய்யும் அளவிற்கு இணையத்தில் பேசியுள்ளனர். அப்போது வீடியோ காலிங் மூலம் அந்த சிறுமி குளிக்கும் போது எடுக்கப்பட்ட அரை நிர்வாண வீடியோவை அந்த வாலிபன் தனது போனில் சேகரித்து வைத்து விட்டான்.
அந்த அரை நிர்வாண வீடியோவை அந்த பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அந்த வாலிபன் அனுப்பியுள்ளான். தன்னுடன் நெருக்கமாக பழக வேண்டும் இல்லை என்றால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என அந்த வாலிபன் மிரட்ட உடனே அச்சிறுமி பதறி போனார். சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். உடனே அச்சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்து விட்டார். அந்த வாலிபரை தற்போது போலீஸார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து உள்ளனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…