கஞ்சா போதையில் தெருவில் சென்றவர்களை கடித்து குதறிய 22 வயது இளைஞன்!

Published by
Rebekal

கஞ்சா போதை தலைக்கேறியதும் தெருவில் செல்லக்கூடிய மக்களையெல்லாம் விரட்டி விரட்டி கடித்து குதறிய 22 வயது இளைஞன் கட்டிப் போடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 22 வயதுடைய கண்ணன் எனும் இளைஞன் கடந்த பல வருடங்களாகவே கஞ்சா அடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இவருக்கு கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் போதையில் என்ன செய்வதென்று அறியாமல் தெருவில் செல்லக்கூடிய மக்களை எலலாம் விரட்டி விரட்டி ரத்தம் குடித்து ரத்தக் காயங்களை கொடுத்துள்ளார். உடல் முழுவதும் ரத்தத்துடன் காணப்படக்கூடிய இந்த 22 வயது இளைஞனை அங்குள்ள சில இளைஞர்கள் மிகவும் மல்லுக்கட்டி அச்சத்துடன் கைகளையும் கால்களையும் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தன்னை அவிழ்த்து விடவேண்டும் எனவும் தான் சுதந்திரமாக திரிய வேண்டும் எனவும், தான் ஏற்கனவே வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போன விரக்தியில் தான் இவ்வாறு கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் உளறிக்கொண்டே சென்றுள்ளான்.

ஒரு கட்டத்தில் என் கட்ஸை பாருங்கள், ஒரே அடியில ஒருத்தனை தூக்கி வீசிறுவேன் என கூறி தன்னை அவிழ்த்துவிடுமாறு கூறியுள்ளார். இளைஞன் எவ்வளவு கூறியும் யாரும் கயிற்றை அவிழ்த்து விடாததால் அருகில் இருந்தவர்கள் எல்லாம் மிரட்ட ஆரம்பித்துள்ளார். அதன்பின் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றவர்களே அச்சத்துடன் மருத்துவமனையில் உள்ள கட்டிலில் கட்டிப் போட்டு மருத்துவர்களை அழைத்துள்ளனர். மருத்துவர்கள் அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து தற்போது சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. கஞ்சா போதையில் 22வயது இளைஞன் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு திரைப்பட வசனம் பேசிக் கொண்டிருக்கக் கூடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

8 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

8 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

9 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

9 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

10 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

10 hours ago