இன்று முதல் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும்!

Published by
Rebekal

இன்று முதல் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

நேற்று சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பெற்று கொண்டார். அதன் பிறகு சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்பட கூடிய தடுப்பூசி மையத்தை திறந்து வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் குறிப்பிடத்தக்க இலக்கை எட்டி கொண்டிருப்பதாகவும், ஆகஸ்ட் 23 முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன் படி இந்த திட்டம் இன்று சென்னை ராஜீவ்காந்தி ஓமந்தூரார் ஸ்டான்லி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தொடங்கி வைக்கப்பட்ட உள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை அதிகப்படுத்தும் விதமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

18 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

49 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago