சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் பாதிப்பு கூடுதலாக இருக்கிறது. நேற்று மட்டும் அங்கு 7,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினசரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் நிரம்பிவிட்டன. அங்கு படுக்கைகள் கிடைக்காததால் நோயாளிகள் ஆம்புலன்சிலேயே மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. நோயாளிகளுடன் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வாசலில் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்சிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்த நிலையில், படுக்கைகள் இல்லாத நிலையில் உயிரிழந்ததாகவும், தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனை வாசலில் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…