கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 3 புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோவையில் உள்ள பொள்ளாச்சியில் ரூ. 1 கோடி 20 லட்சம் மதிப்பீட்டிலான தார் சாலையை அமைக்கும் பணிகளின் தொடக்கமாக பூமி பூஜை நடத்தி வைத்தார் . அதில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவ பயில்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகளை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு மாடுகளை பாதுகாக்கும் நோக்கத்திலும், நாட்டு இன நாய்களை பாதுகாக்கும் பொருட்டிலும் ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்திருந்த அமைச்சர், தற்போது கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் புதிதாக 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை பூங்காவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…