தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள் கட்டித்தரப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில்,

  • தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள, திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க 5,000 முகாம் வாழ்  பயிற்சியளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்திடவும், சிறு, குறு தொழில் செய்திட ஏதுவாக, முகாம்களில் உள்ள 300 சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக, ஒவ்வொரு சுய உதவி குழுவுக்கும் தலா ரூ.1.25 ஆயிரம் வழங்கப்படும்.
  • அதன்படி, கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 321 சுய உதவி குழுக்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ஆயிரத்துடன், மேலும், ரூ.75,000 வழங்கப்படும்.  இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.6,14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணக்கொடை குடும்பத்தலைவர்களுக்கு ரூ.1,500, குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.1,000 மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு ரூ.21 கோடியே 49 லட்சம் செலவாகும்.
  • இலங்கை தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ஒரு முறை ரூ.7 கோடி செலவினம் ஏற்படும். குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்கு, தலா ரூ.400 ஆணிய விலை வழங்கப்படும்.
  • இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும்.
  • இலங்கை தமிழர்களுக்கு கோ ஆப்டெக்ஸில் வழங்கப்பட்டு வந்த இலவச ஆடை, மத்திய அரசு நிர்ணயித்த திட்டத்தில் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு  விலைப்புள்ளியின் அடிப்படையில்,  ரூ.1,790-, இருந்து, ரூ.3,473-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • இலங்கை தமிழர்களுக்கு ரூ.1,796 மதிப்பில், சேலம் இந்திய உருக்காலை  நிறுவனம் மூலம், உயர்தர பாத்திரங்கள் வழங்கப்படும்.
  • இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
  • இலங்கை தமிழர்களின் வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.261 கோடியே 54 லட்சம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய ரூ.12 கோடியே 25 லட்சம், வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 43 கோடியே 61 லட்சம் என மொத்தமாக ரூ.317 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
  • இலங்கை தமிழர்களின் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் 50 மாணவருக்கான கல்வி, விடுதி கட்டணத்தை அரசு ஏற்கும்.
  • ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ.5 கோடியும், கல்விக்காக ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹2,500லிருந்து ₹10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுக்கு ₹3000ல் இருந்து ₹12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ₹5000ல் இருந்து ₹20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

4 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

7 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago