தயார் செல்போன் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட 6-ம் வகுப்பு பயிலும் சிறுவன்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, மார்த்தாண்டம் பட்டியை சேர்ந்த சீனிமுருகன் – ஜோதிமணி தம்பதியினரின் இரண்டாவது மகன் பாலகுரு. இவர்களது மூத்த மகன் மதன் மற்றும் பாலகுரு இருவரும் பெற்றோரின் செல்போனில் விளையாட ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில், சீனிமுருகன் வேலைக்கு சென்றுள்ளார். ஜோதிமணி திருமண விழாவுக்காக வெளியூர் சென்றுள்ளார். பின் வீடு திரும்பிய ஜோதிமணி, அவரது இரண்டாவது மகன் பாலகுரு தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறுவனின் உடலை மீட்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுவன் அவரது தாயார் வெளியூர் கிளம்பிய போது, செல்போனை கேட்டதாகவும், அதற்க்கு ஜோதிமணி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…