இலங்கையில் சிக்கி தவித்த 713 இந்தியர்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடி வருகை!

Published by
லீனா

இலங்கையில் சிக்கி தவித்த 713 இந்தியர்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரசை அழிப்பதற்கு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர். 

இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஜலஸ்வா என்ற கப்பல் மூலம் இலங்கையில், சிக்கி தவித்த 713 இந்தியர்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 699 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள். 

இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக, துறைமுக வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இலங்கையில் வடக்கு மாகாணம். கிழக்கு மாகாணங்களில் சிக்கி தவித்தவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் என பலதரப்பப்பட்டவர்கள் உள்ளனர். 

இந்நிலையில், இவர்கள் வரவேற்பதற்காக, தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட காவல்துறை காணப்பணிப்பாளர் ஆகியோர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், இவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக 30 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது. 

Published by
லீனா

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

2 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

3 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

4 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

4 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

5 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

6 hours ago