ரூ.900 கோடி ஜிஎஸ்டி மோசடியில் தமிழகத்தில் போலி நிறுவனங்கள்.! புலனாய்வு துறை அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.
  • அதில் சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.900 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர். அதில் விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் கடன் பெற்று தருவதாக கூறி, அவர்களது பேன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இந்த மோசடி கும்பல் வாங்கியுள்ளது. அதனைக் கொண்டு வங்கிகளில் கணக்கு தொடங்கியதுடன், பல போலி நிறுவனங்களையும் ஆரம்பித்துள்ளனர். அதன் மூலம் ரூ.900 கோடி போலியான ரசீதுகளை உருவாக்கி, 152 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த மோசடியில் செயல்பட்ட 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கமிசனாக பெற்ற ரூ.24 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஒரு வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது நூற்றுக்கணக்கான பேன் கார்டு, ஆதார் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஊரகப் பகுதிகளை சேர்ந்த பெண்களுடையதாக இருந்துள்ளது.

மேலும், வங்கி காசோலைகள், ரப்பர் ஸ்டாம்புகள், டெபிட், கிரெட் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago