One-man commission member Justice Gokul Das [Image source : PTI]
கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. இன்னும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை உலுக்கிய இந்த விஷச்சாராய சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, விஷச்சாராயம் தயாரிப்பு, விற்பனை, அதன் பாதிப்புகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நேற்று நியமித்து இருந்தது. இந்த ஒருநபர் ஆணையம் நேற்று முதல் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ள விசாரணை அதிகாரி கோகுல்தாஸ் இன்று செய்தியாளர்களிடம் முக்கிய தகவலை குறிப்பிட்டார். அவர் பேசுகையில், தற்போது விசாரணை நிலை குறித்து எந்த விவரமும் கூற முடியாது என கூறினார். இறுதியாக விசாரணை முடிந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசு முறையாக அறிவிக்கும் என கூறினார்.
அப்போது விசாரணை ஆணைய அறிக்கை சமர்ப்பிக்க காலஅவகாசம் வழங்ப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என விசாரணை ஆணைய தலைவர் கோகுல்தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…