யூ-டியுப் மூலம் பிரசவம் பார்த்த காதலன்.. இறந்த குழந்தை.. கவலைக்கிடத்தில் மாணவி!

Published by
Surya

சென்னை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் நர்மதா. இவர் கம்மார்பாளயத்தை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 27 வயதாகும் சவுந்தர், தனியார் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் டெலிவர் செய்யும் வேலை செய்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதலிப்பது வீட்டிற்கு தெரியாது. ஆனால் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நர்மதா கர்பமடைந்தார். 

8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், நேற்று மாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. பிரசவ வழியாக இருக்குமோ என அஞ்சிய அவர், தனது காதலான சவுந்தருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து, யாருக்கும் தெரியாமல் சவுந்தர் நர்மதாவை கம்மார்பாளையம் அருகே உள்ள காப்புக்காட்டிற்கு அழைத்து சென்று தானே பிரசவம் பார்ப்பதாக கூறினார்.

அதன்பின், இருவரும் காப்புக்காட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் நர்மதாவை படுக்கவைத்து யூ-டியுபில் பிரசவ விடீயோக்களை பார்த்து அதுப்படியே பிரசவம் பார்த்து வந்தார். அப்பொழுது கையால் குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தார்.

அப்பொழுது குழந்தையின் கை துண்டாக வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையின் கையை காட்டிலேயே வீசினார். குழந்தையை எப்படியாவது வெளியே எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தன்னிடம் இருந்த பிளேடால் தோப்பில் கொடியை அறுத்தார். அப்பொழுது நர்மதாவின் குடலில் அந்த பிளேடு தெரியாமல் அறுத்தது. அப்பொழுது ரத்தம் அதிகமாக வெளியேறியதை பார்த்து அவள் கதறினாள். 

நிலைமை பெரிதானால், சுந்தரின் மோட்டார் சைக்கிளில் நர்மதாவை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், நர்மதா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினார். இதனையடுத்து, நர்மதாவை எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அறுவைசிகிச்சை மூலம் இறந்த நிலையில் அந்த ஆண் குழந்தை எடுக்கப்பட்டு, நர்மதாவுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக குமிடிப்பூண்டி காவலர்கள், சுந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

25 minutes ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

2 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

2 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

3 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

4 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

5 hours ago