மனைவியின் தங்கையை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கணவர்..!

Published by
murugan

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காராப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(22). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தற்போது புவனேஸ்வரன் மனைவி கர்ப்பமாக உள்ளார். புவனேஸ்வரன் மனைவியின் தங்கை  மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பள்ளி கோடை விடுமுறைக்காக மே மாதம் புவனேஸ்வரன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மனைவியின் தங்கை என்று கூட பார்க்காமல் மாலாவிற்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் கொடுமை செய்துள்ளார். அங்கு மாலா பத்து நாட்கள் தங்கியிருந்த நிலையில் பலமுறை வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற மாலா விடுதியில் தங்கி உள்ளார்.
அப்போது மாலாவின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. இதை கவனித்த விடுதி காப்பாளர் மாலாவை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடனே மாலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தனது அக்காவின் கணவர் புவனேஸ்வரன் தான்  இதற்கு காரணம் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாலாவின் தாய் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து புவனேஸ்வரனை  தேடி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago