18 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட அப்துல் கலாம் தேசிய நினைவகம்….!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் தேசிய நினைவகம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கியமான இடங்கள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து சுற்றுலா தலங்கள் சிலவற்றை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், அப்துல் கலாம் நினைவாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் ராமேஸ்வரத்தில் உள்ள பேக் கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அப்துல் கலாமின் நினைவகம் ஊரடங்கு காரணமாக கடந்த 18 மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது.

தற்பொழுது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த அப்துல் கலாம் நினைவகத்தை பார்வையிடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று காலை முதல் பொதுமக்கள் பலர் பார்வைக்காக இந்த அப்துல் கலாம் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது.

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

10 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

11 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

12 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

12 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

13 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

14 hours ago