சென்னை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. இதனை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த புகைப்பட கண்காட்சி முடிந்ததும், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் 3 நாள் கன்னியாகுமரி பயணம் பற்றியும், அது தொடர்பான வீடியோ வெளியாவது பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய பிரகாஷ் ராஜ், அவரே கேமிராமேன், டைரக்டர், ஆடியன்ஸ் என அனைவரையும் கூட்டிக்கொண்டு சென்று ஷூட்டிங் நடத்தி வருகிறார் என விமர்சனம் செய்தார்.
அடுத்தது காந்தி திரைப்படம் வந்த பிறகு தான் மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது என பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு பதில் கூறிய பிரகாஷ் ராஜ், ஆமாம், எனக்கும் பிரதமர் மோடி வந்த பிறகு தான் கன்னியகுமாரியே தெரியும். விவேகானந்தர் பற்றி கூட இப்போது தான் தெரியும் என நகைச்சுவையாக விமர்சனம் செய்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் இருந்து தான் பாஜகவை எப்போதோ அனுப்பியாச்சே. மேலே (வடக்கே) என்ன மக்கள் என்ன முடிவு பண்ணிருக்காங்கனு தெரியல. அவங்களும் மோடியை வீட்டுக்கு அனுப்புற முடிவுல தான் இருக்காங்கனு நினைக்கிறேன். அனுப்பினால் நன்றாக இருக்கும். ஆளும் கட்சி தான் தோற்கும். அதற்குரிய அனைத்து வேலைகளையும் மோடி பார்த்துவிட்டார் என நடிகர் பிரகாஷ் ராஜ் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…