நடிகர் சரத்குமாரின் போலி மொபைல் நம்பர் உருவாக்கம் – சென்னை காவல் ஆணையரிடம் சரத்குமார் புகார்!

நடிகரும் சமத்துவ கட்சி தலைவருமாகிய சரத்குமாரின் மொபைல் நம்பர் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே சமத்துவக் கட்சி தலைவரும், தமிழ்த் திரையுலகின் நடிகருமான சரத்குமார் அவர்கள் பெயரில் பல விஐபிகளுக்கு அழைப்புகள் சென்றுள்ளதாகவும், தனது செல்போன் எண்ணை போலியாக உருவாக்கி மோசடியில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையரிடம் சரத்குமார் புகார் அளித்துள்ளார்.
சரத்குமார் காவல் ஆணையரிடம் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் போலி என் மூலம் சரத்குமாருக்கு வந்த பதிவு விவரங்களையும் போலீசாருக்கு சரத்குமார் கொடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சூப்பர் ஐடியா.., ஆன்லைன் ஷாப்பிங்கில் AI உதவியுடன் ஆடைகளை அணிந்து பார்த்து வாங்கும் முறை.!
June 6, 2025
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி.! சிறப்பம்சங்கள் என்னென்ன?
June 6, 2025
நார்வே செஸ்: வெறும் 0.5 புள்ளிகள் வித்தியாசம்., மேக்னஸ் கார்ல்சன் முன்னிலை.! 2-ம் இடத்தில் குகேஷ்..,
June 6, 2025
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு – RBI அதிரடி.!
June 6, 2025