நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை முலம் கருத்து சொல்வதில் வல்லவர் மடமையை தனது காமெடி மூலம் கலாய்த்து தள்ளுவதில் மிக நேர்த்தியாக செயல்படுவார்.
அதே சமயம் விழிப்புணர்வு அளிப்பதில் என்றுமே அவர் தவறியதில்லை காமெடி முதல் தற்போது கன்று நடுவது வரை,திருவண்ணாமலை என்றாலே மலை தான் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.தெய்வத்தை தரிசிக்க சென்ற நாம் தெய்வம் படைத்த இயற்கையை நாம் மறந்து விட்டு வருகிறோம்.
இந்நிலையில் தான் நடிகர் விவேக் திருவண்ணாமலையில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழாவை தொடங்கி வைத்துள்ளார்.தூய்மை அருணை இயக்கம் சார்பில் திருவண்ணமலை மலை மீது 10 ஆயிரம் கன்றுகளை இந்த இயக்கத்தின் அமைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.வ வேலு ஏற்பாடு செய்தார் இவர்களுடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக் மரக்கன்று நடுவதை ஒரு தேசிய இயக்கமாக செயல்படுத்த வேண்டும்.மேலும் மரக்கன்று நடுவது நமது வாழ்வில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.நடிகர் விவேக் தமிழகம் முழுவதும் தனது சினிமா பணிக்கு நடுவிலும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நாமும் சுற்றுச்சுழலை பாதுகாக்க இயற்கைக்கு துணை நிற்ப்போம்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…