ஐந்து வருடம் தன்னுடன் வாழ்ந்து விட்டு ஏமாற்றப் பார்க்கிறார் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார்!

Published by
Rebekal

தன்னுடன் 5 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலே வாழ்ந்து விட்டு தற்போது திருமணம் குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான திரைப்படம் தான் நாடோடிகள். இந்த படத்தில் பணக்கார வீட்டு காதலர்கள் கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகை தான் சாந்தினி தேவா. இவர் மேலும் சில படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது நடிகை சாந்தினி தேவா முன்னாள் அதிமுக அமைச்சரும் ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏவுமான மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார். மணிகண்டன் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் சாந்தினி அளித்துள்ள புகாரில், தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் தன்னை ஏமாற்றுவதாக கூறியுள்ளார்.

மேலும், பலமுறை தன் கருவை கலைக்க வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும், திருமணம் குறித்து பேசினால் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டி வருவதாகவும் கூறியுள்ள நடிகை சாந்தினி மணிகண்டன் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

14 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

58 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

2 hours ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

3 hours ago