நடிகை ஜோதிகா தற்பொழுது ரூ. 25 லட்சம் நிதியுதவியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அளித்திருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மிகவும் பழமையான அரசு மருத்துவமனைகளுள் ஒன்று தஞ்சாவூர் ராஜ மிராசுதார் மருத்துவமனை. இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், கோவில்களை புதுப்பிக்க செலவு செய்கிறீர்கள் அந்த காசை பள்ளி கூடம், மருத்துவமனை கட்டுவதற்கு செலவிடுங்கள் என கூறியிருந்தார்,இதனால் அப்பொழுது எதிர்ப்பும் எழுந்தது வந்தது.
அதற்கு பிறகு பேசிய நடிகை ஜோதிகா ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக நான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு எதிர்புறத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அந்த மருத்துவமனையின் சுத்தம், சுகாதாரம் தோற்றம், மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஜோதிகா தற்பொழுது தஞ்சாவூர் ராஜ மிராசுதார் மருத்துவமனையில் உரிய வசதி இல்லையென்று மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 25 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார், இதனால் மருத்துவமனையில் மோசமாக பழுது அடைந்திருந்த சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா சீர் செய்து வண்ணங்கள் பூசப்பட்டு புதுப்பித்து தந்துள்ளனர். ஜோதிகாவின் இந்த நற்செயலை பாராட்டி பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றார்கள்.
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…