பட்டியலின மக்கள் தொடர்பாக அவதூறான கருத்து பரப்பும் வகையில் மீரா மிதுன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு.
பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய புகாரில் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரை அடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node