செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.! தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.!

ADMK protest

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. 

தமிழக மின்சாரத்துறை , டாஸ்மாக் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த செந்தில் பாலாஜியை அண்மையில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு அவருக்கு இதய அறுவை சிகிச்சை காரணமாக ஓமந்தூரரர் மருத்துவமனையில் இருந்து அதன் பிறகு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை இன்று நடந்து முடிந்தது

இதற்கிடையில், கைது மற்றும் இதய சிகிச்சை காரணமாக செந்தில் பாலாஜி துறைகள் மாற்றப்பட்டு மற்ற அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டது. இருந்தும் இலாகா இல்லாதா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்று கூறியும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக போராட்டத்தை அறிவித்தது.

அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலும், சேலத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையிலும், மற்ற ஊர்களில் அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்கள் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்பாட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு , சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Omar Abdullah - IMF
Baglihar Dam Opened
Pak Lanch pad destroyed by indian army
32 Airports closed
Pak drone in India Borders
Drones intercepted in Jammu