அதிமுக துணை நிர்வாகிகள் நியமனம் – ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவிப்பு..!

Published by
Edison

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தல்,குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 தருவதாக அறிவித்ததை உடனடியாக திமுக அரசு நிறைவேற்ற  வேண்டும் உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்,அதிமுக துணை நிர்வாகிகளை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மற்றும் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.அதன்படி,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் :

  • கொள்கை பரப்பு துணைச் செயலாளர் – பேராசிரியர் முனைவர் சா. கலைப்புளிதன், M.Com., M.Sc., M.A, M.L., M.Phil, Ph.D., (தலைமைக் கழகப் பேச்சாளர், வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்)

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள்- இணைச் செயலாளர்கள் :

  • திரு. R.P. மருதராஜா, M.Sc., Ex. M.P., அவர்கள் (பெரம்பலூர் மாவட்டம்)
  • டாக்டர் S. முத்தையா, Ex. M.L.A., அவர்கள் (பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, ராமநாதபுரம் மாவட்டம்)
  • திரு. ராயபுரம் மனோ அவர்கள் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்,வட சென்னை மாவட்டம்)
  • திரு. M.C. தாமோதரன், Ex. M.P., அவர்கள்(முன்னாள் அமைச்சர், கடலூர் மாவட்டம்)

கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள்

  • இணைச் செயலாளர் – பொன். ராஜா, Ex. M.L.A., அவர்கள் (பொள்ளேரி தொகுதி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம்)
  • துணைச் செயலாளர் – P. சந்தானகிருஷ்ணன் அவர்கள் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்,வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்)

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி:

இணைச் செயலாளர் -திரு.E. லட்சுமிநாராயணன் அவர்கள் (சென்னை மாநகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்,வட சென்னை வடக்கு மாவட்டம்)

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு :

திரு. M.A. சேவியர் அவர்கள் (திருவள்ளுவர் நகர், கொடுங்கையூர்,பெரம்பூர் பகுதி, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே,கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று தெரிவித்துள்ளனர்.

Published by
Edison

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

13 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago