#BREAKING: அதிமுகவில் 6 பேர் பதவியிலிருந்து விடுவிப்பு -ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.!

Published by
murugan

திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேரை பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளிட்டுள்ளனர்.

திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினால் அதிமுகவில் 6 பேர் பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், கழகத்தைச் சேர்ந்த குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினாலும்,

P. காஞ்சனா, (குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக் குழு 5-வது வார்டு உறுப்பினர்)

R. அன்னபூர்ணம், (ஊராட்சி ஒன்றியக் குழு 4-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை மேற்கு ஒன்றியக் கழக இணைச் செயலாளர் )

K.M. பொன்னுச்சாமி, (ஊராட்சி ஒன்றியக் குழு 7-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை மேற்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர் )

M.பழனிவேல், (ஊராட்சி ஒன்றியக் குழு 9-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி)

G. செந்தில்வடிவு, (ஊராட்சி ஒன்றியக் 11-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் )

R. ஸ்டாலின், (குஜிலியம்பாறை மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

10 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

10 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

11 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

12 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

12 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

13 hours ago