அதிமுகவின் வாக்குறுதிகள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுக இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி தான். இதன் மூலமாகவே அவர் தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர் என்பது தெரியவருவதாக கூறியுள்ளார். மேலும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான சட்டமன்றத் தேர்தல் வாக்கு வித்தியாசம் வெறும் 3% தான் எனவும் கூறியுள்ளார்.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட அதிமுக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது, திமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. எனவே, உண்மையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தான் வெற்றி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் திமுகவின் வாக்குறுதிகளை முழுமையாக ஏற்றுக் கொண்டதும் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என கூறிய அவர், மக்களிடம் அதிமுகவின் வாக்குறுதிகள் முழுமையாக சேர்க்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், சிலர் அதிமுகவை அழித்து இரட்டை இலையை முடக்குவதற்கு நினைத்ததாக தினகரனை சாதிய அவர், உலகிலேயே ஒரு கட்சியை அழிக்க தொடங்கப்பட்ட கட்சி இன்று முகவரி இழந்து இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…