Anbumani Ramadoss - Jayalalitha [File Image]
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவினர் பாமகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோரிக்கை வைத்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூலை 13இல் வெளியாக உள்ளது . தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் ராஜா போட்டியிடுகிறார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். அதிமுக , தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.
அதிமுக, தேமுதிக போட்டியிடாத சூழலில், விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவினர், அதிமுக மற்றும் தேமுதிக கட்சியினரின் வாக்குகளை பெற தீவிர முயற்சி செய்து வருகின்றனர். நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அங்கு மேடையில் இருந்த பேனர் புகைப்படத்தில் பிரதமர் மோடி அண்ணாமலை ஆகிய கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படத்தோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.
முன்னதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்து அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளது. அதில், திருமங்கலம் , ஈரோடு இடைத்தேர்தல் போல இந்த இடைத்தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடக்காது என குறிப்பிட்டு இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூட மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார். மேலும் எங்களை (அதிமுக) போல மற்ற கட்சிகளும் தேர்தலை புறக்கணித்து இருந்தால் தேர்தல் ஆணையத்திற்கு இந்த விவகாரம் தெரியவந்து ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்து இருப்பார்கள் என்று தனது கருத்தை முன்வைத்தார்
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…