கொரோனா தொற்று காரணமாக கடந்த பிப்ரவரி,மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைந்தனர்.
மேலும்,ஆன்லைன் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தோல்வி என விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம்,மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில்,பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல் – மே மாதம் மற்றும் மறுதேர்வுக்கான செமஸ்டர் தேர்வுகளின் அட்டவணையானது தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் https://www.annauniv.edu/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,தேர்வானது வரும் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த தேர்வானது காலை,மாலை என இருவேளை 3 மணி நேரம் ஆப்லைன் முறையில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
அதன்படி,காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,மேலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என்றும்,மேலும்,மாணவர்கள் தேர்வு எழுதியதும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,அரியர் மாணவர்களுக்கான தேர்வானது வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…