#Breaking:அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுதேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!

Published by
Edison
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல் – மே மாதம் மற்றும் மறுதேர்வு உள்ளிட்ட செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த பிப்ரவரி,மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைந்தனர்.

மேலும்,ஆன்லைன் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தோல்வி என விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம்,மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில்,பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல் – மே மாதம் மற்றும்  மறுதேர்வுக்கான செமஸ்டர் தேர்வுகளின் அட்டவணையானது தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் https://www.annauniv.edu/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,தேர்வானது வரும் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த தேர்வானது காலை,மாலை என இருவேளை 3 மணி நேரம் ஆப்லைன் முறையில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

அதன்படி,காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,மேலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என்றும்,மேலும்,மாணவர்கள் தேர்வு எழுதியதும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,அரியர் மாணவர்களுக்கான தேர்வானது வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published by
Edison

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

12 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

33 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

44 minutes ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

1 hour ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

2 hours ago