சென்னை உயர்நீதிமன்றம் மு.க.ஸ்டாலின் மீதான மேலும் ஒரு அவதூறு வழக்கை ரத்து செய்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி சதீஸ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் சார்பில் தொடரப்பட்ட மேலும் ஒரு அவதூறு வழக்கை ரத்துசெய்தது. மேலும், 5 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேபோல பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மீதான அவதூறு வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 8 அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…