மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு விண்ணப்ப படிவம் இணையதள பக்கத்தில் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே மார்ச் மாதம் 24 முதலே மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டிற்கான முதுகலைப் படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதுவோருக்கான விண்ணப்பபடிவங்கள் இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ மாணவியர் சேர்க்கை விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக தொடங்கியுள்ளது. மேலும் முதுகலை பட்டப் படிப்புகள் M.Phil மற்றும் P.hd பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு எழுதலாம் எனவும் அதற்கான விண்ணப்பத்தை www.mkuniversity.ac.in என்ற இணையதள முகவரி வாயிலாக மாணவர்கள் பெறலாம் எனவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் வசந்த் அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…