வேட்புமனு தாக்கலில் வெடித்த சர்ச்சை.! திமுக – அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.!

Published by
மணிகண்டன்

DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக  அதிமுகவினர் இடையே வாக்குவாதம்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் தங்கள் வேட்புமனுக்களை தான் முதலில் வாங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்ப்பட்டது.

அதாவது , திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வருவதற்கு முன்னரே அவரது  ஆதரவாளர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான டோக்கனை அதிகாரிகளிடம் வாங்கிவிட்டார். அதன்படி டோக்கன் எண் 2ஆக இருந்துள்ளது. அதன் பிறகு 11.45 மணி அளவில் வந்த அதிமுக வேட்பாளர் ராயபுரம் மணிக்கு டோக்கன் எண் 7 கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பளாருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்துள்ளார்.

அதிமுக வேட்பாளருக்கு பின்னர் தான் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர்பாபு உடன் வந்துள்ளார் என தெரிகிறது. அப்போது டோக்கன் படி நாங்கள் தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வோம் என திமுகவும், முதலில் வேட்பாளருடன் வந்த நாங்கள் தான் வேட்புமனு தாக்கல் செய்வோம் என திமுக , அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், யாரிடம் வேட்புமனு வாங்குவது என குழம்பிய தேர்தல் அலுவலர், பின்னர் மூத்த அதிகாரிகளிடம் விவரத்தை கூறிவிட்டு, முதலில் சுயேட்சை வேட்புமனுவை பெறுவதாகவும், அதன் பின்னர் டோக்கன் வரிசைப்படி வேட்புமனுக்களை பெறுவதாகவும் கூறியுள்ள்ளனர்.

இதனை அதிமுக தரப்பு ஏற்றுக்கொண்டாலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் இதுகுறித்து தங்கள் தரப்பு புகாரை அளித்துள்ளனர். இந்த வாங்குவதற்கு இடையில் பாஜக வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ், தாங்கள் வேட்புமனு செய்ய காலதாமதாகிறது என பாஜகவினரும் தேர்தல் அலுவலரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

11 hours ago
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

11 hours ago
மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

11 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

12 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

13 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

13 hours ago