டாஸ்மாக் அருகே உள்ள பார்களை மூட வேண்டும்..! தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்த உயர்நீதிமன்றம்..!

Published by
லீனா

மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட டாஸ்மாக் நிர்வாகத்திற்க்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.  மேலும் சில்லறை விற்பனை கடைகளில் இருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயே அல்லது வேறு தனியார் இடத்திலேதான் அருந்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை 

தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி டாஸ்மாக் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது இந்த மேல்முறையீடு மனு  இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

விதிகளில் திருத்தம் 

மேலும், டாஸ்மாக் அருகே பார்களை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டுவர தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வழக்கு தொடர்ந்தவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வலக்கை ஏப்.26க்க சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago