ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது!

Published by
Rebekal

தமிழகம் முழுவதிலுமுள்ள ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது.

தமிழக மக்கள் அனைவருக்கும் இத்தனை காலங்களாக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோடு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால் யார் வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொடுக்க ஏதுவாக இருந்தது. ஆனால் தற்பொழுது வருகிற ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படவுள்ளது. குடும்பத்தில் உள்ள ஒருவரின் கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருக்கும், இனி ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அந்த கைரேகை பதிவு செய்யப்பட்ட நபர் மட்டுமே வந்து தங்களது கைரேகையை வைத்து பொருட்கள் வாங்கி செல்ல முடியும்.

மேலும் இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு உதவி ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் சமூக இடைவெளி பற்றிய புதிய இயந்திரப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், புதிய விற்பனை இயந்திரத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இயந்திரத்தை அலட்சியமாகவோ அல்லது தவறான முறையில் கையாண்டு சேதப்படுத்தினால் சரிசெய்வதற்கு அல்லது அந்த இயந்திரம் மாற்றி புதிதாக வழங்கப்படுவதற்கு ஏற்ற தொகையை சம்பந்தப்பட்ட நியாய விலை கடை விற்பனையாளர் செலுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

5 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

6 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

7 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

7 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

8 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

9 hours ago