அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்பு.!

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்மனு மீதான பரிசீலனை நடைபெற்று வந்த நிலையில், சில தகவல்கள் மறைக்கப்பட்டதாக திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அண்ணாமலையின் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அதனை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை எனவும் திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மலர்விழி அரவக்குறிச்சி சென்று ஆலோசனை நடத்திய பின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025