அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு என்பதில் உண்மையில்லை.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கூட்டணியில் இருப்பதால் ஓபிஎஸ் – ஈபிஎஸ் பிரதமரை சந்தித்துள்ளனர். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு என்பதில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கூறுகையில், இது தொடர்பாக நீதிமன்றம் நடுநிலையாக தீர்ப்பளிக்கும். அரசியல் காழ்புணர்ச்சியால் சோதனை செய்திருந்தால், அந்த வழக்கு நிற்காது என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…