தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளுடன் காணொலி காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை மறைமலை நகரில் மாநில தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அமைச்சர், நாட்டில் பெரும்பான்மையான மாநிலங்களிலும் பாஜக தொடர்ந்து தனது ஆட்சியை நிலைநாட்டி கொண்டியிருக்கிறது. காங்கிரஸ் எல்லா இடங்களிலும் சரிவை கண்டு வருகிறது. பிரதமர் மீதமான நம்பிக்கையே இதற்கு காரணம்.
வரப்போகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தனது முழு பலத்தை வெளிப்படுத்தும். ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும். கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காக பாஜக அரசு அர்ப்பணித்து கொண்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சீர்சிருத்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே போராடி வருகின்றனர். மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். மலிவான குடும்ப அரசியலை வெறுக்கின்றனர். நாடு முழுவதும் நடக்கின்ற தேர்தல்களில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…