திண்பண்டம் என்று நினைத்து, நாட்டுவெடியை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தொட்டியம் பகுதியை சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 3 பேர் அங்குள்ள காவிரி ஆற்றில் நாட்டு வெடிகளை பயன்படுத்தி மீன் பிடித்து வந்துள்ளனர். மீன்களை பிடித்துக்கொண்டு தனது சகோதரர் பூபதி வீட்டிற்கு கொண்டு சென்ற தமிழரசன், மீதமுள்ள நாட்டு வெடி ஒன்றை அங்கு வைத்து சென்றுள்ளார்.
அந்த வேளையில், அங்கு வந்த பூபதியின் 6 வயது மகன் விஷ்ணுதேவ், மீதமுள்ள ஜெலட்டின் குச்சியை, திண்பண்டம் என நினைத்து சாப்பிட முயன்ற போது, அது வெடித்தது. இதனையடுத்து, விஷ்ணுதேவ் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல்துறைக்கு பயந்த அவரது பெற்றோர், அருகில் உள்ள சுடுகாட்டில் குழந்தையின் சடலத்தை எரித்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான புகாரின் பெயரில், காவல்துறையினர் கங்காதரன், மோகன்ராஜ், தமிழரசன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…