மாணவன் உயிரிழப்பு தொடர்பாக பள்ளி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இன்று காலை பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தனியார் பள்ளி ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டார். பேருந்திலிருந்து மாணவர்களை இறங்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, மாணவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. அதன்படி, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனில் இருந்து இறங்கிவிடும் ஊழியர் ஞானசக்தி மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாகாத மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் விசாரணை நடத்தினார். பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். பள்ளி ஊழியர், தாளாளர், தலைவர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், ஞானசக்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…